Description
விரைவில் மின்னூலாக
‘குழந்தைகள்’ உலகின் உயரின தொடரின் சந்ததிகள். உயிரின முதிர்ச்சியே உயரினம். உயரின வாழ்க்கையில் சந்ததிகள் பிறப்பே இயற்கை நியதி. குழந்தைகள், ஆண்பெண் தம்பதிகளில் ‘ஆண்மை, பெண்மை’ என்னும் உயிர்ப்பே முதன்மையுள்ளது. சந்ததியெனும் குழந்தைகளே வாழ்க்கையின் பெரும்பயன். இதை அறிவினமாய் பிறந்த ஒவ்வொருவரும் அறிவோமே.
குமரி மாவட்டத் தேருரார் ஐயா கவிமணி அவர்களையும் மற்றும் அழ. வள்ளியப்பா அவர்களையும் பின்பற்றியே ‘குழந்தைகள் கவிதைகள்’ எழுதுவது – தொடர்கின்ற நம் சந்ததிகளுக்கு நான் பகிரும் அன்பளிப்பாய் கருதுகிறேன்.
ஆசிரிய பணி ஓய்வில் 20 ஆண்டை நிறைவு செய்த முதுமை நிலையில், ஆறு கவிதைப் புத்தகங்களுடன் ஏழாவது கவிதைப் புத்தகமாய் ‘குழந்தைக் கவிதைகள்’ புத்தகத்துடன் தொடர்கிறேன்.
விரைவில் மின்னூலாக